ads

கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த பிரியங்கா சோப்ரா

சல்மான் கான் படத்தில் இருந்து விலகி கார்டியன்ஸ் ஆப் கேலக்சி 3 படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார்.

சல்மான் கான் படத்தில் இருந்து விலகி கார்டியன்ஸ் ஆப் கேலக்சி 3 படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா கடந்த 2002இல் விஜயின் 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகி இந்தி, தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்கள் வரையிலும் ஏராளமான படங்களில் நடித்து விட்டார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் 'Purple Pebble Pictures - PPP' நிறுவனம் சார்பில் தயாரிப்பாளராகவும் 5 படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக Baywatch, A Kid Like Jake போன்ற இரு ஹாலிவுட் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு சல்மான் கானுடன் இணைந்து 'பரத்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் திடீரென்று சல்மான் கான் படத்தில் இருந்து விலகி மார்வல் நிறுவனம் தயாரிக்க உள்ள 'Guardians of the Galaxy' படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் ஜேம்ஸ் கண் இயக்கத்தில் வெளியான Guardians of the Galaxy வரிசையின் இரண்டு பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் மூன்றாம் பாகத்தையும் இயக்குனர் ஜேம்ஸ் கண் இயக்க உள்ளார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மார்வல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ படங்களுள் ஒன்றான இந்த படம் வரும் 2020 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ளது. மேலும் சல்மான் கானுடன் இணைந்து 'பரத்' படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென்று விலக தற்போது கத்ரினா கைப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்த பிரியங்கா சோப்ரா