ads

தமிழ் படம் 2.0 படத்தை பார்த்த தயாரிப்பாளரின் தற்போதைய மன நிலை இது தான்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் படம் 2.0 படத்தை பார்த்த தயாரிப்பாளர் சஷிகாந்த் நிலைமை குறித்து இயக்குனர் சிஎஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் படம் 2.0 படத்தை பார்த்த தயாரிப்பாளர் சஷிகாந்த் நிலைமை குறித்து இயக்குனர் சிஎஸ் அமுதன் தெரிவித்துள்ளார்.

ரேடியோ ஜாக்கி மற்றும் நடிகரான மிர்ச்சி சிவா, தற்போது இயக்குனர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் 'தமிழ் படம் 2.0' படத்தில் நடித்து வருகிறார். இளைஞர்களிடையே ரஜினி படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பிற்கு ஈடாக தமிழகத்தில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. தமிழ் சினிமா மற்றும் அரசியலை கலாய்க்கும் விதமாக உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த டீசரில் துப்பறிவாளன், விவேகம், துப்பாக்கி, மங்காத்தா, விக்ரம் வேதா, மெர்சல் போன்ற படங்களை கலாய்த்து வெளியிட்டிருந்தனர். இதன் பிறகு இந்த படத்தின் இயக்குனர் சிஎஸ் அமுதன் சிங்கப்பூரில் முக்கியமான கலந்தாய்வு நடந்து கொண்டிருப்பதாக டொனால்டு ட்ரம்பயும் கலாய்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த் இந்த படத்தை பார்த்த பிறகு தலையில் கை வைத்து உட்காந்திருப்பது போன்ற புகைப்படத்தை சிஎஸ் அமுதன் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளரின் மன நிலை இது தான் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கே இந்த நிலைமை என்றால் படத்தை பார்க்க போகும் மக்களின்  நிலைமை என்ன ஆகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்து வரும் இந்த படத்தின் வில்லனாக காமெடி நடிகர் சதிஷ் நடித்து வருகிறார்.

தமிழ் படம் 2.0 படத்தை பார்த்த தயாரிப்பாளரின் தற்போதைய மன நிலை இது தான்