ads

ரசிகர்களுக்கு ராகவா லாரன்சின் அன்பான வேண்டுகோள்

ragahva lawrence meet her fans salem at february 7th

ragahva lawrence meet her fans salem at february 7th

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'காஞ்சனா 3' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இவரது குணாதிசியங்களுக்கும் நடிப்பிற்கும் ஏற்ப பல்வேறு இடங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இந்நிலையில் இவரை சந்தித்து புகைப்படம் எடுக்க கடலூரை சேர்ந்த ஆர் சேகர் என்பவர் சென்னை வந்துள்ளார். வரும் வழியில் சென்னையில் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் வேதனை அடைந்த லாரன்ஸ் தற்போது அவரது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் "என்னை சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகருள் ஒருவரான சேகர் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருடைய இழப்பு மன வேதனையை அளித்துள்ளது. அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டேன். இந்த சம்பவம் மூலமாக ரசிகர்களுக்காக ஒரு முடிவை எடுத்துள்ளேன். இனிமேல் எந்த ரசிகரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம். இந்த இழப்பே இறுதியாக இருக்க வேண்டும்.

ரசிகர்கள் வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் துயரத்தை நீக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்து ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுக்க முடிவு செய்துள்ளேன். அதன் முதல் கட்டமாக வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி சேலத்தில் ரசிகர்களை சந்திக்க உள்ளேன்." என்று அவர் தெரிவித்துள்ளார். 

ரசிகர்களுக்கு ராகவா லாரன்சின் அன்பான வேண்டுகோள்