ads

ராஜ்கிரண் மற்றும் ரக்சனை இயக்க உள்ள ராம்பிரகாஷ் ராயப்பா

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் விஜய் டிவி ரக்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் விஜய் டிவி ரக்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம்பிரகாஷ் ராயப்பா, இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜீவா மற்றும் சிபிராஜ் ஆகியோரை வைத்து 'போக்கிரி ராஜா' படத்தை இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விக்ராந்த், இயக்குனர் சுசீந்திரன் மற்றும் இயக்குனர் மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த படமும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராம்பிரகாஷ் ராயப்பா தனது அடுத்த படத்திற்கு ரெடியாகி விட்டார். இவருடைய அடுத்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'பவர் பாண்டி' படத்தில் நாயகனாக என்ட்ரி கொடுத்த ராஜ்கிரண் விஷாலுடன் இணைந்து 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார்.

இவருடன் இணைந்து விஜய் டிவி மூலம் பிரபலமான தொகுப்பாளர் ரக்சனும் நடிக்க உள்ளார். ரக்சன் தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை கல்பத்குரு பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விரைவில் இந்த படத்தில் பணிபுரியவுள்ள இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. 

ராஜ்கிரண் மற்றும் ரக்சனை இயக்க உள்ள ராம்பிரகாஷ் ராயப்பா