ads

ஒரு இயக்குனர் நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒரே படத்தில்

நான்கு வெவ்வேறு கதைகள் கொண்ட படத்தில் சமுத்திரக்கனி சுனைனா ஜோடியாக நடிக்க உள்ளனர்.

நான்கு வெவ்வேறு கதைகள் கொண்ட படத்தில் சமுத்திரக்கனி சுனைனா ஜோடியாக நடிக்க உள்ளனர்.

நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் 'ஆண் தேவதை'. இயக்குனர் தமீரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கணவன்-மனைவி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பிள்ளைகளுக்காக பணம் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் பிள்ளைகளுக்கு பாசத்தை தர மறந்த குடும்பஸ்தர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். இந்த படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி நடிப்பில் பேரன்பு, வட சென்னை, கிட்ணா போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது.

ஒரு இயக்குனர் நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒரே படத்தில்

இந்த படங்களுக்கு பிறகு 'பூவரசம் பீப்பி' படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். இந்த படம் நான்கு வித்தியாசமான கதைகளை கொண்டதாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு 'சில்லு கருப்பட்டி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நான்கு கதைகளுக்கும் நான்கு வெவ்வேறு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் ஒரு கதையில் தான் சமுத்திரக்கனி நடிக்க உள்ளார். இந்த கதையும் ஒரு நடுத்தர தம்பதியினரின் வாழ்க்கை முறையை பற்றி கூறவுள்ளது.

ஒரு இயக்குனர் நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒரே படத்தில்

இந்த கதையில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சுனைனா நடிக்க உள்ளார். இரண்டாவது கதையில் 'ஓகே கண்மணி' லீலா சாம்சனும், மூன்றாவது கதையில் தெய்வ திருமகள் குழந்தை நட்சத்திரமான சாரா அர்ஜுனும், நான்காவது கதையில் 'மகளிர் மட்டும்' நிவேதிதா சதீஷும் நடிக்க உள்ளனர். நான்கு ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்ஸா, அபிநந்தன் ராமானுஜம், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். இந்த படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

ஒரு இயக்குனர் நான்கு ஒளிப்பதிவாளர்கள் ஒரே படத்தில்