ads

கொம்பு வச்ச சிங்கம்டா படப்பிடிப்பை துவங்கிய சசிகுமார்

கொம்பு வச்ச சிங்கம்டா படப்பிடிப்பை துவங்கிய சசிகுமார்

கொம்பு வச்ச சிங்கம்டா படப்பிடிப்பை துவங்கிய சசிகுமார்

அசுரவதம் படத்திற்கு பிறகு நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் 'கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இந்த படத்தினை 'சுந்தரபாண்டியன்' படத்தின் இயக்குனரான எஸ்ஆர் பிரபாகரன் இயக்குகிறார்.

சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா சபாஸ்டின் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பினை சமுத்திரக்கனி கிளாப் அடித்து துவங்கி வைத்துள்ளார். தற்போது காரைக்குடியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சசிகுமார் மற்றும் மடோனா ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.

இதன் பிறகு பொள்ளாச்சி, பழனி, தென்காசி மற்றும் விருதுநகர் போன்ற இடங்களில் படப்பிடிப்பினை நிகழ்த்த உள்ளனர். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பினை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பினை மும்முரமாக செயல்பட்டு ஒரே கட்டமாக முடிக்க உள்ளனர். 

கொம்பு வச்ச சிங்கம்டா படப்பிடிப்பை துவங்கிய சசிகுமார்