ads

இந்திய சினிமாவை பிரமாண்டத்தில் ஆழ்த்திய ஷங்கரின் 2.0

இந்திய சினிமாவை பிரமாண்டத்தில் ஆழ்த்திய ஷங்கரின் 2.0

இந்திய சினிமாவை பிரமாண்டத்தில் ஆழ்த்திய ஷங்கரின் 2.0

சிவாஜி, எந்திரன் படங்களுக்கு பிறகு இயக்குனர் சங்கர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் '2.0'. நேற்று வெளியான இந்த படத்திற்கு தற்போது வரையிலும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.

நேற்று தியேட்டர்களில் எதிர்பார்த்ததை விட குறைவான காட்சிகளை காண்பிக்கப்பட்ட நிலையில், படத்தின் வரவேற்பு அதிகரிக்க அதிகரிக்க, இந்த படத்தின் தியேட்டர் காட்சிகளையும் அதிகப்படுத்தியுள்ளனர். இதுவரை இந்த படத்தினை கண்டு பிரமாண்டத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்த படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து, இயக்குனர் சங்கரை பாராட்டி வருகின்றனர்.

தற்போது உலகமே செல்போன் மயமாகி விட்டதாலும், செல்போன் டவர்கள் அதிகரித்ததாலும் சிட்டி குருவி இனம் அழிந்தே போய் விட்டன. ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் பணத்தின் பின்னாலே ஓடி கொண்டிருக்கிறோம். இந்த படத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் சிட்டு குருவி இனத்தின் நிலைமையும், செல்போன் பயன்பாடுகளின் ஆபத்தும் பெரும்பாலானோருக்கு புரிந்துள்ளது. இது ஒரு விழிப்புணர்வு படமாக கருதி, இனியாவது மக்கள் செல்போன் பயன்பாட்டினை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

இந்திய சினிமாவை பிரமாண்டத்தில் ஆழ்த்திய ஷங்கரின் 2.0