ads

முதன் முறையாக சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி

சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு, 'ஏஏஏ' படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் 'எத்தி' என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மாடல் அழகியான டயானா எரப்பா 'சாயா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி இயக்கத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதன் முறையாக சிம்பு, சுந்தர் சியுடன் கூட்டணி வைத்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இவர் சுந்தர் சி இயக்கத்தில் 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு தனி ஒருவன், அரண்மனை 2, கத்தி சண்டை, கலகலப்பு 2 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள 'இமைக்கா நொடிகள்' படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள புதுப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

முதன் முறையாக சிம்பு படத்திற்கு இசையமைக்கும் ஹிப் ஹாப் ஆதி