ads

நாயகனாக மாறிய நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ்

நாட்டுப்புற பாடலால் அனைவர் மனதையும் கொள்ளை அடித்த செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.

நாட்டுப்புற பாடலால் அனைவர் மனதையும் கொள்ளை அடித்த செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் நாட்டு புற பாடலால் ரசிகர்கள் அனைவரும் கவர்ந்தவர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன பிறகு திரைப்பட உலகில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மவுசு அதிகமாகி கொண்டே வருகிறது. நாட்டுப்புற கலைஞரான செந்தில் கணேஷை முதலில் இமான், 'சீமராஜா' படத்தில் 'பராக் பராக்' என்ற பாடலை பாடினார்.இதன் பிறகு  செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து பிரபு தேவாவின் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் 'சின்ன மச்சான்' பாடலை பாடி அசதியுள்ளனர்.

இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பிறகு சூர்யா 37 படத்திலும் ஏஆர் ரஹ்மானின் புதுப்படம் ஒன்றிலும் அடுத்ததாக பாடவுள்ளார். இப்படி தனது குரலால் ரசிகர்கள் மனதில் நாட்டுப்புற பாடலை பதிய வைத்து வரும் செந்தில் கணேஷ் அடுத்ததாக நாயகனாக களமிறங்குகிறார். இந்த படத்தினை செல்ல தங்கையா என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'கரிமுகன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக காயத்ரி என்பவர் நடித்து வருகிறார். பாடகரான செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் இந்த படத்திலும் பாடலை பாடியுள்ளார்.

நாயகனாக மாறிய நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ்

நாயகனாக மாறிய நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ்