ads

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ரியோ ராஜ்

கனா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கனா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ள சிவகார்த்திகேயனின் முதல் படம் 'கனா'. தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனத்தின் மூலம் தனது நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜுடன் இணைந்து 'கனா' படத்தை கனவாக தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இசை மற்றும் டீசர் போன்றவை வெளியாகியுள்ளது.

இந்த டீசரில் இந்த படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் சிறப்பு தோற்றத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் இரண்டாவது படமான இந்த படத்தில் நாயகனாக ரியோ ராஜ் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மற்றும் சரவணன் மீனாட்சி போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

இது தவிர விக்ரம் பிரபுவின் சத்ரியன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது பிக்பாஸ் பன் அன்லிமிடேட் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். இதன் பிறகு திரைத்துறையில் நாயகனாக சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இது தவிர இந்த படத்தில் யூடியூபில் பிரபலமான பிளேக் ஷீப் டீமும் பணிபுரிகின்றனர். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிட உள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ரியோ ராஜ்