ads

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு

இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தின் மூலம் பிஎஸ் மித்ரன் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலே பிஎஸ் மித்ரன் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனால் இவருடைய அடுத்த படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில் இவருடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் பிஎஸ் மித்ரன் தனது அடுத்த படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள 'சீம ராஜா' படம் வசூல் சாதனையை படைத்து வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஒரு கல் ஒரு கண்ணாடி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்திலும், 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

இது தவிர ஒரு தயாரிப்பாளராகவும் தனது நண்பனான அருண்ராஜா காமராஜாவின் 'கனா' படத்தினை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது 15வது படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரனுடன் இணைந்துள்ளார். இரும்புத்திரை படம் போல பிஎஸ் மித்ரனின் அடுத்த படமும் சமூக கருத்துக்களை கொண்ட படமாக உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பினை அடுத்த ஆண்டு துவங்கவுள்ளனர்.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வ அறிவிப்பு