ads

எஸ்ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கரின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு

நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்ஜே சூர்யா,

நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்ஜே சூர்யா, 'ஒரு நாள் கூத்து' இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனரான எஸ்ஜே சூர்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்புகள் இருந்து வருகிறது. கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'ஸ்பைடர்' படத்தில் வில்லனாகவும் என்ட்ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து விஜயின் 'மெர்சல்' படத்திலும் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார். இவர் தற்போது ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

இவருடைய நடிப்பில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை, இரவாக்காளம், உயர்ந்த மனிதன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து எஸ் ஜெ சூர்யா இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தினை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.

எஸ்ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கரின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு

எஸ்ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கரின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு