ads

கார்த்தியின் தேவ் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் எஸ்பிபி

கார்த்தியின் தேவ் படத்தின் மூலம் மீண்டும்  என்ட்ரி கொடுக்கும் எஸ்பிபி

கார்த்தியின் தேவ் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் எஸ்பிபி

நடிகர் கார்த்தி 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வெற்றிக்கு பிறகு  அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் 'தேவ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் பிறகு இந்த படத்தினை வரும் டிசம்பர் மாதத்தில் வெளியிடுவதற்கு படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.

மறுபுறம் இந்த படத்தின் இசையமைப்பு பணிகளையும் மும்முரமாக உருவாக்கி வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இவருடைய இசையமைப்பில் பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு பாடலை பாடியுள்ளார். இது குறித்து நடிகர் கார்த்தி 'அவருடைய குரல் என்னுடைய படத்தில் அமைவது பெருமையாக உள்ளது' என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். நடிகர் மற்றும் பாடகரான எஸ்பிபி 1980 ஆண்டு முதல் 35 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் நடிகராக பாடகராக செயல்பட்டு வருகிறார்.

தற்போது இவருக்கு 72 வயதாகிவிட்ட நிலையில் உடல்நிலையால் அவ்வப்போது ஓரிரு படங்களுக்கு தனது குரலை பதிவு செய்து வருகிறார். இவர் இறுதியாக நடிகர் விஜய் மற்றும் மோகன்லாலின் 'ஜில்லா' படத்தில் 'பாட்டு ஒன்னு' என்ற பாடலை பாடியிருந்தார். இதன் பிறகு நான்கு வருடங்களுக்கு பிறகு கார்த்தி படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

கார்த்தியின் தேவ் படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் எஸ்பிபி