ads

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சூர்யா மற்றும் கார்த்திகை ஒரே படத்தில் காண வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சூர்யா மற்றும் கார்த்திகை ஒரே படத்தில் காண வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது படக்குழு.

இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இயக்குனர் பாண்டிராஜின் 'பசங்க 2' படத்திற்கு பிறகு இந்த படத்தையும் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி நாயகனாக விவசாயியாக நடிக்கும் இந்த படத்தில் சாயிஸா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு என மூன்று நாயகிகள் இணைந்து நடித்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நேற்று படக்குழு வெளியிட்டது. வெளியான ஒரே நாளில் 1.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைனை பெற்று வருகிறது. இந்த டீசரில் கார்த்திக்கின் வசனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் இசை மற்றும் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கார்த்திக்கின் சகோதரரான சூர்யா இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக நடிகர் கார்த்தி சமீபத்தில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் மற்றும் அண்ணன் தம்பியான சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனாலும் திரையில் தனித்தனியாக கண்டுகளித்து வரும் அவர்களை ஒரே படத்தில் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடையே இருந்து வந்த நிலையில் தற்போது இந்த ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது படக்குழு.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள சூர்யா