ads

திகில் படத்திற்காக இரு நாயகிகளுடன் கைகோர்த்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ஆனந்தி மற்றும் ராஜ்புத் போன்ற இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ஆனந்தி மற்றும் ராஜ்புத் போன்ற இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.

நிமிர் படத்திற்கு பிறகு நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்திலும், இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படம் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் மிஷ்கினின் 'சைக்கோ' படத்தின் படப்பிடிப்பையும் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி துவங்கினார்.

இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்க உள்ளார். இவர் முன்னதாக பிரியசகி, தூண்டில் போன்ற படங்களை இயக்கியவர். இந்த படத்தினை OST பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராம் சரவணன் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'ஏஞ்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் காதல் கலந்த திகில் படமாக உருவாக உள்ளது. இந்த படத்தில் நாயகிகளாக நடிகை ஆனந்தி மற்றும் தெலுங்கில் 'RX100' படத்தின் மூலம் பிரபலமான பாயல் ராஜ்புத் போன்ற இரு நாயகிகள் இணைந்துள்ளனர். முன்னதாக இந்த படத்தில் நடிக்க மேயாத மான் புகழ் பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு பதிலாக தற்போது ஆனந்தி மற்றும் பாயல் ராஜ்புத் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் வெளிநாட்டில் நடக்க உள்ளது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார்.

திகில் படத்திற்காக இரு நாயகிகளுடன் கைகோர்த்த உதயநிதி ஸ்டாலின்