ads

பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில் மறைவு

நடிகை கோவை செந்தில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கோவை செந்தில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி செந்தில், வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் கோவை செந்தில். இவருக்கு வயது 74. இவர் தமிழ் சினிமாவில் 1980ஆம் ஆண்டில் இருந்து 38 வருடங்களாக நடித்து வந்துள்ளார். இவருக்கு 74 வயதாகி விட்ட நிலையில் உடல்நல குறைவால் கோயம்பத்தூரில் வடவள்ளி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவிற்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தனர். நேற்று இவருடைய உடல் கோயம்பத்தூரில் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் ஒரு கை ஓசை படத்தின் மூலம் அறிமுகமான இவர் இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் பாக்யராஜ் ஆகியோரது படங்களில் அதிகளவில் நடித்துள்ளார்.

ஏராளமான குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவுடன் 'ஏய்' படத்தில் ஆச்சாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் 'போனா போகுது உச்சி மண்ட தானே..' என்ற வசனம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. இவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல காமெடி நடிகர் கோவை செந்தில் மறைவு