ads

சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி

சர்கார் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தியில் நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சர்கார் இசை வெளியீட்டு விழா காந்தி ஜெயந்தியில் நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. தீபாவளியில் விசுவாசம், என்ஜிகே படங்களுடன் மோத இருந்த நிலையில் இரண்டு படங்களுமே தற்போது தீபாவளியில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் 'சர்கார்' சோலோவாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் காந்தி ஜெயந்தியில் அக்டொபர் 2ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இதன் பிறகு இந்த படத்தின் அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பினை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். இதன்படி நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் உருவாகியுள்ள பாடல்களுக்கு மாஸ்டர் ஷோபி நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் இந்த படத்தில் வரலட்சுமி, பிரேம் குமார், ராதாரவி, யோகி பாபு, பாப்ரி கோஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சர்கார் படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட வரலட்சுமி