ads

விக்ராந்துக்காக வசன எழுத்தாளராக மாறிய விஜய் சேதுபதி

விக்ராந்துக்காக வசன எழுத்தாளராக மாறிய விஜய் சேதுபதி

விக்ராந்துக்காக வசன எழுத்தாளராக மாறிய விஜய் சேதுபதி

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது விஜய் சேதுபதி ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தரமான படங்களை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் இறுதியாக வெளியான 'மேற்கு தொடர்ச்சி மலை' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது.

இவர் தற்போது  நடிகர் விக்ராந்த் நடிக்க உள்ள படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி வருகிறார். ஏற்கனவே இவருடைய நடிப்பில் வெளியான 'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்கு வசனங்களை அமைத்திருந்தார். இதன் பிறகு விக்ராந்தின் அண்ணனான சஞ்சீவ் இயக்க உள்ள புதுப்படத்திற்கு வசனங்களை அமைத்து வருகிறார்.

இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இயக்குனர் சஞ்சீவ் அவரிடம் கதை கூறியுள்ளார். ஆனால் விஜய் சேதுபதி இந்த கதைக்கு விக்ராந்த் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க சொல்லினாராம். இது தவிர இந்த படத்திற்கு நானே திரைக்கதை, வசனங்களை அமைத்து தருவதாகவும் கூறியதாக இயக்குனர் சஞ்சீவ் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

விக்ராந்துக்காக வசன எழுத்தாளராக மாறிய விஜய் சேதுபதி