ads

ராஷி கண்ணாவுடன் இணைந்து அயோக்யா படப்பிடிப்பை துவங்கிய விஷால்

விஷாலின் அயோக்யா படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

விஷாலின் அயோக்யா படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால், இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார். 2005இல் வெளியான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முந்தைய பாகத்தில் நடித்த கதாபாத்திரங்களுடன் இரண்டாம் பாகத்தில் வரலட்சுமி, அர்ஜய், கபாலி விஸ்வநாத், அப்பானி சரத் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் விஷால் பாலு மற்றும் சிவா என்ற இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் அக்டொபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஷால், தனது அடுத்த படத்திற்கான டைட்டில் மற்றும் அறிவிப்பினை சமீபத்தில் தெரிவித்தார். வெங்கட் மோகன் இயக்க உள்ள இந்த படத்திற்கு 'அயோக்யா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் படக்குழு துவங்கியுள்ளது.

இந்த பூஜையில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளார். இவர் முன்னதாக அதர்வாவுடன் இணைந்து 'இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு அடுத்த படத்திற்கு விஷாலுடன் இணைந்துள்ளார். பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார்.

Image Credit - @VishalKOfficial (Twitter)Image Credit - @VishalKOfficial (Twitter)

ராஷி கண்ணாவுடன் இணைந்து அயோக்யா படப்பிடிப்பை துவங்கிய விஷால்