ads

ராட்சசன் இந்தி உரிமையை கைப்பற்றிய விஷ்ணு விஷால்

ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் உறுதி படுத்தியுள்ளார்.

ராட்சசன் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் உறுதி படுத்தியுள்ளார்.

'கதாநாயகன்' படத்திற்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த அக்டோபர் 5இல் வெளியாகி தற்போதுவரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'ராட்சசன்'. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான இந்த படத்தை இயக்குனர் ராம் குமார் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக விஷ்ணு விஷாலின் 'முண்டாசுப்பட்டி' படத்தை இயக்கியவர். தன்னுடைய முதல் படத்திலே வித்தியாசமான கதையை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய இரண்டாவது படமான 'ராட்சசன்' படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் ஈர்த்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஷ்ணு விஷால், அமலா பால், இயக்குனர் ராம் குமார், முனீஸ்காந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு உரையாடி வருகின்றனர்.

முன்னதாக விஷ்ணு விஷால் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் உண்மை தான் என்று விஷ்ணு விஷால் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்தி மட்டுமல்லாமல் இந்த படத்தினை கன்னடத்திலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த படத்தின் மூலம் முதன் முறையாக காவல் துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் என்ட்ரி ஆகியுள்ளார். இதனால் இவருக்கு போலீஸ் கதாபாத்திரங்கள் சார்ந்த படமும் அதிகமாக உள்ளது.

ராட்சசன் இந்தி உரிமையை கைப்பற்றிய விஷ்ணு விஷால்