ads

தயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை.

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை.

'சிறுத்தை' படத்தை இயக்கிய இயக்குனர் சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது 'விசுவாசம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக முதன் முறையாக டி இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா இணைந்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் அஜித் லோக்கல் கெட்டப்பிலும், காவல் அதிகாரியாகவும் நடித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் ஸ்ரீதேவியின் இரங்கல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அஜித்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டார்.

இதன் பிறகு 'விசுவாசம்' படத்தின் அடுத்த படப்பிடிப்பை வரும் மார்ச் 23-ஆம் தேதி முதல் துவங்க படக்குழு முடிவு செய்தது. ஆனால் திடீரென தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தத்தால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் புதிய படங்கள் வெளியாகாது, படப்பிடிப்பு மற்றும் டீசர், ட்ரைலர் போன்ற எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இதனால் தற்போது 'விசுவாசம்' படக்குழு படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த அனுமதிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. தல அஜித் 'விசுவாசம்' படத்தை முடித்த பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தயாரிப்பாளர் சங்கத்தில் விசுவாசம் படக்குழு கோரிக்கை