ads

முதல் ஒருநாள் போட்டியில் வென்றது குறித்து பேசிய விராட் கோஹ்லி

india vs south africa first odi cricket

india vs south africa first odi cricket

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சதத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் டுபெலிசிஸ் 120 ரன்னும், கிறிஸ் மோரிஸ் 37 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப்யாதவ் 3 விக்கெட்டும், யசுவேந்திர சஹால் 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 45.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டன் விராட் கோஹ்லி 119 பந்தில் 112 ரன்னும் 10 பவுண்டரிகளும், ரகானே 86 பந்தில் 79 ரன்னும் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சரும் எடுத்தனர். இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் வீராட்கோலி "இந்த வெற்றி மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்திலேயே தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது முக்கியமான ஒன்று. கடைசி டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்று எண்ணினோம். அதன்படி தற்போது முதல் ஆட்டத்திலேயே வெற்றி அடைந்துள்ளோம். பேட்டிங்க்கு ஏற்ற இந்த ஆடுகளத்தில் தென் ஆப்பிரிக்காவை 269 ரன்களுக்கும் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்களது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோர் தொடக்கத்திலேயே 2 விக்கெட் எடுத்தது ஆட்டத்தின் வெற்றிக்கு கொண்டு சேர்த்தது. இரண்டு சுழற்பந்து வீரர்களும் குல்தீப்யாதவ், சஹால் மிகவும் அபாரமாக வீசினார்கள். முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவில் விளையாடும் அவர்கள் வியக்கதக்க வகையில் செயல்பட்டுள்ளனர். டர்பன் ஆடுகளத்தில் விளையாடியதை உள்ளூரில் ஆடியது போன்று இந்திய வீரர்கள் செயல்பட்டனர். ரசிகர்கள் ஆதரவு பக்கபலமாக இருந்தது." என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2-வது போட்டி வருகிற 4-ந்தேதி செஞ்சூரியன் என்ற இடத்தில் நடக்கிறது.

india vs south africa first odi cricketindia vs south africa first odi cricket

முதல் ஒருநாள் போட்டியில் வென்றது குறித்து பேசிய விராட் கோஹ்லி