ads

ரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி

ரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி

ரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி

நேற்று ராஜ்கோட்டில் இந்தியா - நியூஸிலாந்து இடையேயான இரண்டாவது டி20 முடிந்ததை அடுத்து கோஹ்லியின் பிறந்த நாளையொட்டி ஹோட்டலில் சிறப்பாக அவரது வீரர்களுடன் கேக் வெட்டி  கொண்டாடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை செல்பி எடுத்து அனுப்பினார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ரசிகர்கள் அவருக்கு தெரிவித்தனர். அவருடைய ரசிகர்களுக்கு பதில் அளிக்காததால் சிலர் கோஹ்லி கோவக்காரர், திமிர்பிடித்தவர் என்றெல்லாம் விமர்சிக்க ஆரம்பித்தனர். 

இதற்கு பதில் அளித்த கோஹ்லி உங்களின் அனைவரின் அன்பையும் வாழ்த்துக்களையும் பார்த்து மெய்சிலிர்த்துபோனேன். உங்களது திறமைகளை #one8crew என்ற என்னுடைய குழுவில் காண்பிக்குமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதன்படி ரசிகர்கள் உங்களது பேட்டிங் மற்றும் பௌலிங் திறமைகளை வீடியோ எடுத்து இந்த #one8crew என்ற சமூக வலைத்தளத்தில் பகிரவும். இதன்மூலம் அனைத்து வீடியோக்களை பார்த்து சிறந்த வீரரை கோஹ்லி தேர்வு செய்து அணியில் சேர்ப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #one8crew இந்த குழு கோஹ்லி அணியும் உடையின் எண் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கோஹ்லி "நான் மற்றும் தோனி, இருவரது நட்பினை உடைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நானும் தோனியும் சிறந்த நண்பர்கள் அதனால் அதை பெரிதும் கண்டு கொள்வதில்லை. மேலும் தோனிக்கு கோவமே வராது. அவர் குழந்தை தன்மையுடன் பழகுவார். அவரது வீட்டில் மொத்தம் அவரையும் சேர்த்து இரண்டு குழந்தைகள். எனக்கு அந்த குட்டி பெண்ணைத்தான் ரொம்ப பிடிக்கும்" என்றும் மனம் திறந்து வெளிப்படையாக பேசினார்.

ரசிகர்களுக்கு அழைப்பு தரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி