ads

சிம்புவைக் கேலி செய்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள்

சிம்புவைக் கேலி செய்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள் Imagecredit: Twitter @srinivasm721 @Karthik72113920

சிம்புவைக் கேலி செய்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள் Imagecredit: Twitter @srinivasm721 @Karthik72113920

நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில், கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு  ஒரு டம்பளரில் தண்ணீர் குடுக்க வேண்டுமென்றும் அதை இன்று 3 மணி முதல் 6 மணிக்குள் இணையத்தில் பதிவு செய்ய வேண்டுமென்று சிம்பு கர்நாடக மக்களைக் கேட்டுக்கொண்டார்.

சிம்புவின் இந்தக் கருத்தைக் கேலி செய்த சமூக வலைத்தளங்கள் தற்போது, அவரது ஐடியாவை பெரிதும் பாராட்டி வருகிறார்கள். வன்முறையால் ஒற்றுமையை எப்போதும் கொண்டுவரமுடியாது மனிதாபிமானதால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு பிறகும் என்ற சிம்புவின் கருத்து பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

தற்போது, சிம்புவின் கூற்றுப்படி, கர்நாடக மக்கள் சாலைகளில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் தமிழர்களுக்கு தண்ணீர் குடுப்பது போன்ற வீடியோ பதிவுகளும் கோப்புக் காட்சிகளும் இணையத்தில் பெரிதும் பகிரப்படுகிறது. மேலும், சிம்பு இப்போது கர்நாடக மக்களின் முழு அன்பை பெற்றுள்ளார். 

இதனையடுத்து, சமீபத்தில் சிம்பு வெளியிட்ட ஆடியோ பதிவில், அவர்  கன்னட மக்களுக்கு நன்றிகளைத்த தெரிவித்துக்கொண்டார். மேலும், மக்கள் மனிதாபிமானத்துடன் தான்  இருக்கிறார்கள், சில தீய சக்திகளே இதற்கு பின்னால் இருந்து இவ்வளவு நாட்களாக அரசியல் செய்து தமிழக கன்னட மக்களை ஒன்று சேர விடாமல் தடுத்து வந்துள்ளன  என்று கூறினார். இந்த உண்மையை வெளியே கொண்டுவந்த அவர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.

Courtasy : music ji

சிம்புவைக் கேலி செய்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள்