ads

நடிகர் கதிர் நடிக்கும் புது பட பூஜை

kathir new movie poojai starts yesterday

kathir new movie poojai starts yesterday

இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் தற்போது 'சத்ரு' படம் உருவாகி வருகிறது. இதனை அடுத்து இவருடைய நடிப்பில் சிகை, பறியேறும் பெருமாள் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் கதிர் புது நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை புது முக இயக்குனரான பட்டு கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் பாரி வள்ளல் எம் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு நவீன் சங்கர் இசையமைக்கவுள்ளார். இவர் முன்னதாக 'விசிறி' படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் 'உறுதிகொள்' படத்தின் ஒளிப்பதிவாளர் பாண்டி அருணாச்சலம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் குறித்து இயக்குனர் கூறும்போது "இந்த படத்தின் கதை கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கி நகருகிறது.

கிராமத்திலிருக்கும் நாயகன் ஒரு பெரிய பிரச்சனையை சமாளிக்க நகரத்தை நோக்கி செல்கிறான். அவன்  எப்படி அந்த பிரச்னையை எதிர்கொள்கிறான்? என்ன பிரச்சனை? என்பதே இந்த படத்தின் கதை. சமீபத்தில் நாட்டையே அதிர வைத்த பிரச்சனை தான் அது. இந்த படத்தின் கதையை அமைத்த பின் நாயகர்களை தேர்வு செய்யும் போது பொருத்தமாக அமைந்தவர் தான் கதிர். அவருக்கும் இந்த கதை பிடித்திருந்தது எங்களுக்கு சந்தோசம். நிச்சயம் கதிருக்கு 'மதயானை கூட்டம்', 'கிருமி' போன்ற படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் படமாக அமையும்." என்று இந்த படத்தின் இயக்குனர்  தெரிவித்துள்ளார்.

நடிகர் கதிர் நடிக்கும் புது பட பூஜை