ads

சமந்தாவின் யுடர்ன் படத்தில் இணைந்த நடிகர் நரேன்

நடிகை சமந்தாவின் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது கத்துக்குட்டி நரேன் இணைந்துள்ளார்.

நடிகை சமந்தாவின் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது கத்துக்குட்டி நரேன் இணைந்துள்ளார்.

நடிகை சமந்தா நடிப்பில் இறுதியாக 'மெர்சல்' படம் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகை சமந்தா, விஷாலின் 'இரும்புத்திரை', ராம்சரணின் 'ரங்கஸ்தலம்', சிவகார்த்திகேயனின் 'சீம ராஜா', விஜய் சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்', கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடிக்கும் 'நடிகையர் திலகம்' மற்றும் கன்னட ரீமேக் படமான 'யுடர்ன்' போன்ற படங்களில் பிசியாக உள்ளார்.

இதில் ரங்கஸ்தலம் மற்றும் இரும்புத்திரை போன்ற படங்கள் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதனை அடுத்து கன்னட இயக்குனர் மற்றும் நடிகரான பவன் குமார் இயக்கத்தில் 'யுடர்ன்' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் பிறகு இயக்குனர் பவன் குமார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் சமந்தாவுக்கு காதலர் கதாபாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவீந்திரனும், காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் ஆதியும் இணைந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தாவுடன் நடிகர் நரேன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் மர்மமாக நடைபெறும் கொலைகளை துப்பறியும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். இந்த படம் விதிமுறைகளை மீறி மேம்பாலத்தில் யுடர்ன் எடுக்கும் மனிதர்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதன் பின்னால் ஒழிந்திருக்கும் மர்மத்தை ஆராயும் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. 

சமந்தாவின் யுடர்ன் படத்தில் இணைந்த நடிகர் நரேன்