ads

மதுபானக்கடை இயக்குனருடன் இணைந்த ரங்கா சிபிராஜ்

ரங்கா படத்திற்கு பிறகு சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணனுடன் இணைந்துள்ளார்.

ரங்கா படத்திற்கு பிறகு சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணனுடன் இணைந்துள்ளார்.

நடிகர் சிபிராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு 'சத்யா' என்ற படம் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியானது. இவர் முன்னதாக நடிகர் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் 2016-இல் வெளியான 'க்ஷணம்' என்ற படத்தின் ரீமேக்காக 'சத்யா' வெளியானது. க்ரைம் த்ரில்லராக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இந்த படத்தை சிபிராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சிபிராஜ் தயார் மஹேஸ்வரி சத்யராஜ் தயாரித்திருந்தார். 'சத்யா' படத்தின் வெற்றிக்கு பிறகு சிபிராஜ் தற்போது 'ரங்கா' என்ற படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் டிஎல் என்பவர் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக பல குறும்படங்களை உருவாக்கி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த படத்தின் கதையை உருவாக்க இயக்குனர் வினோத் வாழ்க்கையில் 10 மாதங்களை செலவழித்துள்ளார். இதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை, காஷ்மீர் மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'ரங்கா' படத்திற்கு பிறகு நடிகர் சிபிராஜ் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிபிராஜின் அடுத்த படத்தை இயக்குனர் கமலக்கண்ணன் இயக்க உள்ளார். இவர் முன்னதாக 2012-இல் வெளியான 'மதுபானக்கடை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு சிபிராஜை வைத்து இயக்க உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

மதுபானக்கடை இயக்குனருடன் இணைந்த ரங்கா சிபிராஜ்