ads

யூடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள புதுபடம்

யூடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள புதுப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

யூடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள புதுப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'இரும்புத்திரை'. தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த படம் தற்போது தெலுங்கிலும் 'அபிமன்யுடு' என்ற தலைப்பில் வெளியாகி நல்ல வசூலை படைத்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பில் தமிழில் சூப்பர் டீலக்ஸ், சீம ராஜா மற்றும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'யூடர்ன்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் கடந்த 2016இல் வெளியான 'யூடர்ன்' படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பணிகளும் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனரான சந்தீப் வங்கா என்பவருடன் உதவியாளராக பணிபுரிந்த கிரிசய்யா என்பவர் இயக்க உள்ளார்.

இது தவிர தமிழில் இயக்குனர் ராஜமௌலி, கவுதம் வாசுதேவ் மேனன், விக்ரம் குமார் ஆகியோருடனும் உதவியாளராக பணிபுரிந்துள்ளாராம். தற்போது உருவாகி வரும் யூடர்ன் படம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகி வரும் நிலையில் சமந்தா நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள இந்த படமும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகவுள்ளதாம்.

யூடர்ன் படத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள புதுபடம்