ads

2.0வை தொடர்ந்து இந்தியன் 2விலும் வில்லனாக இணைந்துள்ள அக்ஷய் குமார்

இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தை தொடர்ந்து இந்தியன் 2விலும் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தை தொடர்ந்து இந்தியன் 2விலும் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட படமான '2.0' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் அக்ஷய் குமார். சிட்டி ரோபோவையும் சிட்டு குருவி வில்லனையும் காண ரசிகர்கள் நீண்ட வருடங்களாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் சங்கர் 'இந்தியன் 2' படத்திற்கான பணிகளை துவங்கி மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

2.0வை தொடர்ந்து இந்தியன் 2விலும் வில்லனாக இணைந்துள்ள அக்ஷய் குமார்

இயக்குனர் சங்கரும், இந்தியன் 2விற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள ரவிவர்மனும் இணைந்து இந்த படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகளில் தீவிரமாக உள்ளனர். கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பினை துவங்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிகர் அக்ஷய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சங்கரின் '2.0' படத்தின் மூலம் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் வில்லனாக என்ட்ரி ஆகவுள்ளார். இதன் பிறகு 'இந்தியன் 2' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். முன்னதாக இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் அஜய் தேவ்கனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இவருக்கு பிறகு அக்ஷய் குமாரிடம் கூறுகையில் அவரும் உடனே ஒப்புக்கொண்டாராம். இதன் மூலம் 2.0விற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சங்கருடன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் வில்லனாக அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளார் அக்ஷய் குமார்.

2.0வை தொடர்ந்து இந்தியன் 2விலும் வில்லனாக இணைந்துள்ள அக்ஷய் குமார்