ads

தமிழர்களுக்காக லண்டனில் அனிருத் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

பிரபல இசையமைப்பாளர் அனிருத் லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் அனிருத் லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்.

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளரான அனிருத், தற்போது லண்டனில் தமிழர்களுக்காக பிரமாண்ட இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் இசையமைப்பில் 19 படங்கள் வெளிவந்து ரசிகர்களின் காதில் தற்போது வரை ஒலித்து கொண்டிருக்கிறது.

இவருடைய இசையமைப்பில் இறுதியாக வெளியான வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் வெற்றிக்கு இவருடைய இசை பக்க பலமாக இருந்தது. தெலுங்கில் பாடகராக வளம் வந்த இவர் இசையமைப்பாளராக "அஞ்ஞாதவாசி" படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்துள்ளார்.

இவருடைய இசையமைப்பில் தற்போது கோலமாவு கோகிலா, சூப்பர் ஸ்டாரின் புது படம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் தனுசுடன் அடுத்த வருடம் புது படம் ஒன்றில் இணையாவதாக அனிருத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது அனிருத் லண்டனில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி "THE SSE ARENA, WEMBLEY" என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

தமிழர்களுக்காக லண்டனில் அனிருத் பிரமாண்ட இசை நிகழ்ச்சி