ads

குப்பை கொட்டியதற்கு பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்

பாலாஜி மீது குப்பை கொட்டியதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாலாஜி மீது குப்பை கொட்டியதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 72வது நாளான டாஸ்க் சிரிப்பும் கண்ணீருமாக நிறைவடைந்தது. புதியதாக கொடுக்கப்பட்ட ப்ரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் சிலை நிற்கும் போது அவரவர் குடும்பத்தினரை வரவழைத்து அதிர்ச்சி தந்தனர். இதனால் நேற்றைய நிகழ்ச்சி ஒரே கண்ணீர் மையமாக காட்சி அளித்தது. நேற்று மும்தாஜ், ஜனனி மற்றும் யாஷிகா ஆகியோரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அனைவரையும் சந்தித்து சென்றனர். இந்த டாஸ்க் மூலம் இது ஒரு போட்டி என்பதை நினைத்து குடும்பமாக பழக ஆரம்பித்துள்ளனர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் ஐஸ்வர்யாவின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர் வந்ததும் மகளை சந்திக்காமல் பாலாஜியிடம் சென்று என் மகள் குப்பை கொட்டியதற்கு மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கிறார். பாலாஜியும் அவள் என்னுடைய மகள் போன்றவள் என்று சமாதானம் செய்கிறார். தொடர்ந்து இரண்டு நாட்களாக போட்டியாளர்களுக்கு குடும்ப பிரிவினை உணர்த்தி வருகின்றனர். ஆனால் இதில் பாலாஜிக்கு மட்டும் மனைவி நித்யாவின் கடிதத்தால் சோகமாக முடிந்துள்ளது.

குப்பை கொட்டியதற்கு பாலாஜியிடம் மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவின் தாய்