ads

ஒரு வழியா கதவ துறந்துவிட்ட கமல்..வெளியே செல்ல ரெடியான ஐஸ்வர்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ ரொம்பவே சுவாரிஷ்யமாக உள்ளது. ப்ரோமோவில் ஒரு வழியாக கமல் பிக்பாஸ் கதவை திறந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ ரொம்பவே சுவாரிஷ்யமாக உள்ளது. ப்ரோமோவில் ஒரு வழியாக கமல் பிக்பாஸ் கதவை திறந்துள்ளார்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி வரவர ரொம்பவே போரடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் ரசிகர்களிடம் ஆர்வத்தை பெருக்க புது புது டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. நேற்றைய 62வது நிகழ்ச்சியில் பொம்மலாட்டம் டாஸ்க்கில் மும்தாஜ் செய்த அலப்பறைகள் அனைத்தும் போட்டியாளர்களுக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் மும்தாஜ் மீது அனைத்து போட்டியாளர்களுமே கடுப்பாவே இருந்தனர். இதன் பிறகு சிறு ரின் டாஸ்க் ஒன்று நடந்தது.

இந்த டாஸ்க்கிலும் மும்தாஜ் அணியினர் வெற்றி கண்டனர். ஆனாலும் அனைத்து போட்டியாளர்களுமே மும்தாஜ் மீது வெறுப்பாகவே இருந்தனர். இதனை தீர்த்து வைக்க பிக்பாஸ் ஒரு திட்டம் தீட்டி புதியதாக ஒரு டாஸ்க்கை அறிமுகம் செய்தது. இந்த திட்டப்படி பஞ்சாயத்து தலைவரிடம் போட்டியாளர்கள் தங்களுக்கு எவர் மீது உள்ள கோபத்தையும் கொட்டி தீர்க்கலாம். எவரையும் காட்டாமல் அனைவரின் பார்வையும் மும்தாஜ் மீது திரும்ப, இந்த சண்டையை தீர்த்து வைக்க பாலாஜி தலைவராக முயற்சி செய்தார்.

மேலும் இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸின் ப்ரோமோவின் பரபரப்பு வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதன்படி இன்று வெளியிட்ட ப்ரோமோவில் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்த போது ஐஸ்வர்யாவுக்கும், மும்தாஜிக்கும் இடையே சண்டை முற்றியது. இது தீவிரமடைய நான் வெளியே போனும் பிக்பாஸ் என்று ஐஸ்வர்யா கத்துகிறார். சண்டை பொறுக்காமல் கமலும் இதில் யார் பீலா விடுகிறார் என்பதை பார்க்க 5 நிமிடம் கதவு திறந்து வைக்கப்படும், இதில் வெளியேற நினைப்பவர்கள் வெளியேறலாம் என்று தெரிவிக்கிறார். கதவு திறந்தவுடன் வெளியேறுவதற்காக ஐஸ்வர்யா முந்திக்கொண்டு செல்கிறார். இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரிஷ்யமாக இருக்கும் என்று தெரிகிறது.

ஒரு வழியா கதவ துறந்துவிட்ட கமல்..வெளியே செல்ல ரெடியான ஐஸ்வர்யா