ads

மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றிருக்கலாம்

மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றாமல் இப்போது உண்மையான முகம் வெளியே வந்த பிறகு தவிக்கின்றனர்.

மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றாமல் இப்போது உண்மையான முகம் வெளியே வந்த பிறகு தவிக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 83வது நாள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று ஐஸ்வர்யா கொடுத்த அலப்பறைகளால் பிக்பாஸ் வீடே ரணகளமாக காட்சியளித்தது. செய்யறதை எல்லாம் செய்து விட்டு உடல்நல பிரச்சனையை காட்டி சமாளித்து வந்த மும்தாஜை, வைல்ட் கார்ட் விஜயலட்சுமி நேற்று வெளுத்து வாங்கினார். நேற்று மும்தாஜும், ஐஸ்வர்யாவும் தமிழில் பேசாமல், ஆங்கிலத்தில் பேசியதால் அவர்களை தவிர மற்ற எல்லாரும் தண்ணீருக்குள் இறங்கினர்.

ஆனால் இருவர் மட்டும் எதுவுமே அதை பற்றி பேசாமல் சென்றது மற்ற ஹவுஸ் மேட்ஸை கோபத்திற்கு உள்ளாகியது. இதனால் ரித்விகாவும், ஜனனியும் ஐஸ்வர்யாவிடம் மல்லு காட்டினர். இந்த சண்டைக்குள் மாட்டு கொண்டு யாஷிகா தவித்து வந்தார். இதன் பிறகு மற்ற ஹவுஸ் மெட்ஸிடம் அன்பு காட்டி குத்துவது நானில்லை என ஐஸ்வர்யா சொன்னதை மும்தாஜிடம் மற்ற ஹவுஸ் மெட்ஸ் போட்டு கொடுக்க ஐஸ்வர்யாவுக்கும், மும்தாஜுக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்றது.

நாட்கள் குறைய குறைய இருக்கும் 8பேருக்கும் இடையே கடும் வாக்கு வாதங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்த வார ஏவிக்சனில் யார் வெளியேற போகிறார் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது. ரித்விகா சொன்ன டாஸ்க்கை மும்தாஜ் செய்யாததால் பாவம் ரித்விகா மட்டும் நாமினேஷனில் ஏவிக்சனுக்கு தேர்வாகியுள்ளார். இந்த வார ஏவிக்சனில் இருந்து ரித்விகா காப்பாற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

மகத் சொன்னப்பவே மும்தாஜை வெளியேற்றிருக்கலாம்