ads

மும்தாஜின் பொய்யான முகத்தை கிழிக்கும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்

நாட்கள் வர வர மும்தாஜின் உண்மையான முகம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. அனைவருமே அவர் மீது செம கடுப்பில் உள்ளனர்.

நாட்கள் வர வர மும்தாஜின் உண்மையான முகம் வெளியே வர ஆரம்பித்துள்ளது. அனைவருமே அவர் மீது செம கடுப்பில் உள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 2, 80 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறப்போகும் நபர் யார் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். இந்த வார நாமினேஷனில் மும்தாஜ், பாலாஜி, ஜனனி, சென்ட்ராயன், ரித்விகா, ஐஸ்வர்யா ஆகியோர் தேர்வாகியிருந்தனர். ஆனால் நேற்று வரை நடைபெற்ற போன் பூத் டாஸ்க்கில் ரித்விகாவை தவிர அனைவருமே பிக்பாஸ் சொன்னபடி மற்றவர்களை சமாதானப்படுத்தி டாஸ்கை செய்ய வைத்தனர்.

ஆனால் மும்தாஜ் மட்டும் பேட்டி..பேட்டி என அன்பு காட்டிரிதிவிகாவுக்கு ஆப்பு வைத்துவிட்டார். ரித்விகா சொன்ன டாஸ்க்கை செய்ய மாட்டேன் என்று சொன்ன போது அனைவருமே வந்து நாங்க செஞ்சோம்..உங்களுக்கென்ன என சமாதானப்படுத்தியும் அவர் டாஸ்கை செய்ய மறுத்துவிட்டார். இதனால் இந்த வார ஏவிக்சனுக்கு ரித்விகா மட்டும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த டாஸ்க்கிற்கு பிறகு அனைவருமே அன்பு காட்டி வேஷம் போடும் மும்தாஜை  வெறுக்க ஆரம்பித்து விட்டனர். இதன் பிறகு நேற்று சிறந்த சமையல் காரர் யார் என தேர்வு செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே மும்தாஜ் மீது அனைவருமே கோபத்தில் இருந்த நிலையில் இப்படி ஒரு டாஸ்க் வைத்தது பிக்பாஸுக்கு வசதியாக போனது.

இதில் சிறந்த சமையல் காரராக சமைக்கவே தெரியாத சென்றாயன் தேர்வு செய்யப்பட்டு மும்தாஜுக்கு அனைவருமே பல்பு கொடுத்துவிட்டனர். இதனால் சென்றாயனுக்கும், மும்தாஜுக்கும் இடையே வாக்கு வாதமும் நடைபெற்றது. இத்தனை நாட்களாக பொய்யாக ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டி பழகி மும்தாஜ், தற்போது என்ன செய்வதறியாமல் திணறி வருகிறார். இவர் இறுதி வாரம் வரை செல்வது கடினம் தான்.

மும்தாஜின் பொய்யான முகத்தை கிழிக்கும் பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ்