ads

சமூகத்தில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு காட்டவே நான் வந்திருக்கிறேன் - அறம் இயக்குனர்

gopi nainar speech

gopi nainar speech

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'அறம்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஒரு சமூகம் சார்ந்த படம் என்பதால் இயக்குனருக்கும் நயன்தாராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதனை தொடர்ந்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். அதில் நயன்தாரா முழு நேர அரசியல்வாதியாக நடிக்க உள்ளார். அறம் படத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சிய போக்கு பற்றி விரிவாக படத்தில் எடுத்துரைத்தால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது அதே சமயம் எதிர்ப்புகளும் வலுக்கிறது என்கிறார் இயக்குனர் கோபி நயினார்.

மேலும் திடீரென தொலைபேசியில் மிரட்டல் அழைப்புகள் வருகிறது. ஆனால் அதற்கெல்லாம் நான் பயந்து விட மாட்டேன். சமூகத்தில் நடக்கும் அவலங்களை படம் பிடிக்கவே நான் சினிமாவுக்கு வந்துள்ளேன். வெறும் கமர்சியல் காட்சிகள்  நிறைந்த படங்களை மட்டும் இயக்க மாட்டேன் எனது அடுத்தடுத்த படங்களின் படத்தின் கதையும் சமூகம் சார்ந்ததாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் கோபி நயினார்.   

சமூகத்தில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு காட்டவே நான் வந்திருக்கிறேன் - அறம் இயக்குனர்