ads

அறம் படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

அறம் படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

அறம் படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் 'அறம்'. இந்த படம் சமூகம் சார்ந்த திரைப்படம் என்பதால் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பின் கீழ் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.

சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாராவை தவிர படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குனர் கோபி நயினார் "இயக்குனர் சற்குணம் தான் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து நடிகை நயன்தாராவிற்கு கதை சொன்னோம். சில மணி நேரத்திலே எனக்கு அட்வான்ஸ் வந்துவிட்டது. எல்லாம் ஒரு கனவு போல நிகழ்ந்தது. இந்த படம் சமூகம் சார்ந்த படம் என்பதால் படம் முடிவடைந்த நிலையில் பலர் இந்த படத்தை தடுக்க முயற்சி செய்தனர். 

நயன்தாரா மேடம் தான் எனக்கு உறுதுணையாக நின்றார். எல்லோருக்கும் என்னை போலவே சமூக அக்கறை இருந்ததால் இப்படத்திற்கு பலர் உதவ முன் வந்தார்கள். இந்த படத்திற்கு பாடல்கள் வேண்டாம் என்று முடிவெடித்திருந்தேன் ஆனால் படத்தை முடித்த பிறகு கிப்ரானுக்கு இதை போட்டு காட்டி உமா தேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாரா மேடம் என்னிடம் இந்த  படம் நிச்சயம் வெற்றி பெரும். அடுத்த கட்டத்திற்கு உங்களை நகர்த்தும் வரை உடன் இருப்பேன் என்றார்."

அறம் படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு