ads

இயக்குனர் சுசீந்திரனின் ஏஞ்சலினா படத்தின் புதிய தகவல்

suseenthiran angalina movie shooting wrap up

suseenthiran angalina movie shooting wrap up

வளர்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவரான இயக்குனர் சுசீந்திரன் பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் கொடுத்துள்ளார். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகவும் எதார்த்தமான களத்தினை மையமாக கொண்டு உருவாக்குவதிலும் பெயர் பெற்றவர். தற்பொழுது இவர் இயக்கத்தில் வெளிவந்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கிவரும் படம் 'ஏஞ்சலினா'. புதுமுகங்களை கொண்டு உருவாக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்நிலையில் தற்பொழுது அனைத்து வித காட்சிகளையும் படமாக்கப்பட்டு முடிவடைந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தின் முக்கிய வேடத்தில் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளார். இவரது மகன் சர்வனும் படத்தில் நடித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.      

'ஆறாம் திணை ஃபிலிம்ஸ் – ஸ்ரீ சாய் சிரஞ்சீவி ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இவருடன் ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு பணியில் ஈடுபட தியாகு படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். மேலும் ஜி.சி.ஆனந்தன் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருந்தது. இன்னும் சில நாட்களில் டீசர், ட்ரைலர் போன்றவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

 இந்த படத்தினை தொடந்து இயக்குனர் சுசீந்திரன் மற்றொரு புது படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் இன்றைய சமுதாய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை நாம் திணிப்பதால்  அவர்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள்....அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை என ஒரு கதாபாத்திரத்தை சுற்றி கதை அமைக்கவிருப்பதாக முன்னதாகவே இயக்குனர் சுசீந்திரன் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். 

 

இயக்குனர் சுசீந்திரனின் ஏஞ்சலினா படத்தின் புதிய தகவல்