ads

ஜோதிகாவின் காற்றின் மொழி வெளியீடு தேதி அறிவிப்பு

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காற்றின் மொழி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் காற்றின் மொழி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாச்சியார் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் 'காற்றின் மொழி'. 'மொழி' படத்திற்கு பிறகு 10 வருடங்களுக்கு பிறகு ஜோதிகாவை இயக்குகிறார் ராதா மோகன். இயக்குனர் ராதா மோகனின் 10வது படமான இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து விதார்த், லட்சுமி மஞ்சு, சரண்யா, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இது தவிர சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மருமகன் ஏஹச் காசிப் அறிமுகமாகிறார். தற்போது மும்முரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீடு தேதியினை தற்போது படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த படம் வரும் அக்டொபர் மாதம் 18ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததற்கு ஜோதிகா, ராதா மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் காற்றின் மொழி திரைப்படத்தினை அக்டோபர் 18ஆம் தேதியில் வெளியிட ஒப்புதல் கேட்டு கடிதம் கொடுத்துள்ளீர்கள்.

இதனை எங்களது தயாரிப்பாளர் சங்கத்தில் பரிசீலினை செய்து மேற்கொண்ட அக்டோபர் 18ஆம் தேதியில் தங்களது காற்றின் மொழி படத்தினை வெளியிட குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போப்ட்டா நிறுவனம் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தயாரித்துள்ள இந்த படம் பூஜா விடுமுறையில் வெளியாக உள்ளது.

காற்றின் மொழி படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.காற்றின் மொழி படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜோதிகாவின் காற்றின் மொழி வெளியீடு தேதி அறிவிப்பு