ads

சீயான் விக்ரம் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதுப்பட படப்பிடிப்பு துவக்கம்

விக்ரம் நடிப்பில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

விக்ரம் நடிப்பில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படத்திற்கு பிறகு சாமி ஸ்கொயர், துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இதில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி ஸ்கொயர்' வரும் செப்டம்பர் 21ஆம் தேதியில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சாமி படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரமுக்கு இரண்டு கதாபாத்திரங்கள் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை போன்றவை வெளியான நிலையில் இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு விக்ரம் மலையாள இயக்குனரான ஆர்எஸ் விமல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சுமார் 300 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகவுள்ள சரித்திர படமான இந்த படத்தின் கதை பணிகள் நிறைவடைந்து அடுத்த கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள புதுப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். உலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் கமலின் மகள் அக்ஷரா ஹாசன் நாயகியாக நடிக்க உள்ளார். கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கு இசையமைத்த கிப்ரான் இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

Image Credit - @RKFI (Twitter)Image Credit - @RKFI (Twitter)

சீயான் விக்ரம் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதுப்பட படப்பிடிப்பு துவக்கம்