ads

தோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்

நடிகர் கார்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நேரடியாக நடிக்க உள்ள புதுப்பட தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நேரடியாக நடிக்க உள்ள புதுப்பட தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி, 2004-இல் வெளிவந்த 'ஆயுத எழுத்து' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே அவர் தமிழில் அடியெடுத்து வைத்த முதல் படம். இதன் பிறகு நாயகனாக 2007-இல் வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய ஒரே படத்தின் மூலம் மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கவர்ந்தார். இதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாகவே அமைந்தது.

இவர் தற்போதுவரை தமிழில் 14 படங்களில் நடித்துள்ளார். இதில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த 'தோழா' படம் தெலுங்கில் நேரடியாக உருவான முதல் படம். இவருடைய படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். இதனால் அவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது. இந்நிலையில் 'தோழா' படம் வெளிவந்ததை அடுத்து அவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் ஆதரவு உயர்ந்துள்ளது.

இவரது நடிப்பில் தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படமும், அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கத்தில் பெயரிடப்படாத படமும் உருவாகி வருகிறது. தோழா படத்திற்கு தெலுங்கில் கார்த்தியின் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இதற்கான தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது 'கடைக்குட்டி சிங்கம்' படத்திலும், அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் 'நீடி நாடி ஓகே கதா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் 'தோழா' படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராக உள்ளது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

தோழா படத்திற்கு பிறகு இரு மொழிகளில் தயாராகும் கார்த்தியின் புது படம்