ads

சூர்யா மற்றும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அனைவரும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர்.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அனைவரும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர்.

நடிகர் கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பசங்க, மெரினா, கோலி சோடா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இயக்குனர் பாண்டிராஜ் நடிகர் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்திற்கு பிறகு 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா தனது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நேற்று நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அனைவரும் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் மற்றும் சாயிஸா ஆகிய இரு நாயகிகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு நடிகர் கார்த்தி ஒரு குடும்பத்தின் கடைக்குட்டி பிள்ளையாக விவசாயியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கார்த்தி படத்திற்கு டி இமான் முதன் முறையாக இசையமைத்துள்ளார்.

மேலும் இயக்குனர் பாண்டிராஜ் படத்திலும் முதன் முறையாக இமான் இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்திற்கு முன்பு இந்த படத்தின் சிறு காட்சிகள் மட்டுமே எடுக்க இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனையால் தள்ளிப்போன இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் பிறகு படக்குழு விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் வெளியீடு தேதியினை அறிவிக்க உள்ளனர்.

சூர்யா மற்றும் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பு நிறைவு