ads

கணவர் படத்தின் மூலம் திரைத்துறையில் மீண்டும் அறிமுகமாகும் நஸ்ரியா

நடிகை நஸ்ரியா தனது கணவர் நடிக்க உள்ள புது படத்தை தயாரிக்க உள்ளார்.

நடிகை நஸ்ரியா தனது கணவர் நடிக்க உள்ள புது படத்தை தயாரிக்க உள்ளார்.

நடிகை நஷ்ரியா, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 13 படங்களில் நடித்துள்ளார். தமிழில் 5 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி நடிகையாக விளங்குகிறார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'திருமணம் எனும் நிக்கா'. இந்த படம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியானது. இதன் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலை மணந்து நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படம் இவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. இவரின் திருமணத்திற்கு திரையுலகிற்கு எப்போது திரும்ப வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். ஆனால் நடிகையாக அல்லாமல் முதன் முறையாக தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார்.

இவர் தயாரிக்க உள்ள முதல் படத்தில் அவரின் கணவர் பஹத் பாசில் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் அமல் நீரத் இயக்க உள்ளார். இவர் முன்னதாக பஹத் பாசிலை வைத்து 'அயூபிண்டே புத்தகம்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. 

கணவர் படத்தின் மூலம் திரைத்துறையில் மீண்டும் அறிமுகமாகும் நஸ்ரியா