ads

பொன் மாணிக்கவேல் படம் குறித்து மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்

நடிகை நிவேதா பெத்துராஜ், தான் பிரபு தேவாவுடன் இணைந்து நடிக்க உள்ள

நடிகை நிவேதா பெத்துராஜ், தான் பிரபு தேவாவுடன் இணைந்து நடிக்க உள்ள 'பொன் மாணிக்கவேல்' படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவா நடிப்பில் 'மெர்குரி' படத்திற்கு பிறகு யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, காமாஷி, லக்ஷ்மி மற்றும் பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் தனது உதவி இயக்குனர் மற்றும் நண்பரான முகில் செல்லப்பன் இயக்கத்தில் முதன் முறையாக காவல் துறை அதிகாரியாக பிரபு தேவா 'பொன் மாணிக்கவேல்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து நிவேதா பெத்துராஜும் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து நிவேதா பெத்துராஜ் கூறுகையில் "இந்த படத்தின் மூலம் நான் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் கிடைத்துள்ளது. எனக்கு இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு மனைவி கதாபாத்திரம். நான் இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது.

நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபு தேவாவுடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நானும் விரைவில் இணைய உள்ளேன். இதற்காக ஆவலாக இருக்கிறேன்.இது தவிர நடிகர் விஜய் ஆன்டனியுடன் இணைந்து திமிரு புடிச்சவன் படத்திலும் நடித்து வருகிறேன்.

இந்த படத்தில் இயக்குனர் என்னை சண்டை காட்சியிலும் நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார். நேமிசந்த் ஐபக் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து வருகிறார். 

பொன் மாணிக்கவேல் படம் குறித்து மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்