ads

தன்னுடைய முதல் பட தயாரிப்பாளருடன் இணைந்து சமுத்திரக்கனி உருவாக்கும் அப்பா 2

நாடோடிகள் 2 படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை நேற்று தந்தையர் தின நல்வாழ்த்துக்களுடன் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

நாடோடிகள் 2 படத்திற்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை நேற்று தந்தையர் தின நல்வாழ்த்துக்களுடன் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி நடிப்பில் காலா மற்றும் கோலிசோடா 2 போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் காலா படத்தில் இவருடைய 'ஓட்டே அடி தான்' என்ற வசனம் மக்களிடம் பிரபலமாகி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் பேரன்பு, கொளஞ்சி, ஆண் தேவதை, வட சென்னை போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.

இது தவிர ஒரு இயக்குனராகவும் சசிகுமாருடன் இணைந்து 'நாடோடிகள் 2' படத்தை உருவாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர் மற்றும் இயக்குனருள் ஒருவரான இவர் அடுத்ததாக புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் இவருடைய இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி பள்ளி குழந்தைகளின் பேராதரவை பெற்ற 'அப்பா' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை உலக அப்பா நாளான நேற்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை சமுத்திரக்கனியின் முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்' படத்தை தயாரித்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்பிபி சரண் தயாரிக்க உள்ளார். கடந்த 2016இல் வெளியான 'அப்பா' படம் பள்ளி குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் படமாக அமைந்தது. அந்த வகையில் இதன் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இந்த படம் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை எடுத்துரைக்க உள்ளது. இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

 

சமுத்திரக்கனியின் இயக்கத்தில் எஸ்பிபி சரண் தயாரிப்பில் உருவாகவுள்ள அப்பா 2 கல்லூரியை சார்ந்த கதை.சமுத்திரக்கனியின் இயக்கத்தில் எஸ்பிபி சரண் தயாரிப்பில் உருவாகவுள்ள அப்பா 2 கல்லூரியை சார்ந்த கதை.

தன்னுடைய முதல் பட தயாரிப்பாளருடன் இணைந்து சமுத்திரக்கனி உருவாக்கும் அப்பா 2