ads

எம்என் நம்பியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ராஜ்கிரண்

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண், நம்பியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண், நம்பியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பாக்யராஜ் நடிப்பில் கடந்த 1982-ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'தூறல் நின்னு போச்சு'. இந்த படம் பாக்யராஜின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக சுலக்ஷனா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த சுலக்ஷனா தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.

இவர்களுடன் நடிகர் எம்என் நம்பியார், செந்தில், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நம்பியாரும் நடிப்பு தற்போது வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படம் நடிகர் பாக்யராஜின் வாழ்க்கையில் முக்கியமான வெற்றி படமாகும். இதன் பிறகு இந்த படம் தெலுங்கில் 'பெல்லி சுப்புழு' என்ற தலைப்பிலும், இந்தியில் 'மொஹப்பத்' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது இந்த படத்தை நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் ரீமேக் செய்ய உள்ளார். கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யப்படும் இந்த படத்தில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், எம்என் நம்பியார் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரணும் நடிக்க உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் 'அசுரவதம்' படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் 'நாடோடிகள் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு 'தூறல் நின்னு போச்சு' படத்தை ரீமேக் செய்யவுள்ளார்.

எம்என் நம்பியார் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள ராஜ்கிரண்