ads

சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் புதிய தகவலை வெளியிட்ட சுசீந்திரன்

suttu pidikka utharavu shooting updates

suttu pidikka utharavu shooting updates

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவரான இயக்குனர் சுசீந்திரன் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் இயக்கிய நான் மகான் அல்ல, பாண்டிய நாடு போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றது. இதுவரை இயக்குனராக வளம் வந்த சுசீந்திரன் தற்பொழுது 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் மூலம் நடிகராகவும் வளம் வர இருக்கிறார். இவரின் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' துவங்கிய ஜனவரி 29ம் நாட்களிலே 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கிவரும் இப்படத்தில் சுசீந்திரன், மிஸ்கின், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிஸ்கின் காவல் துறை அதிகாரியாகவும் அதிரடி கெட்டப்பில் களமிறங்கி உள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் சுசீந்திரன் அவரது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் 'இயக்குனர் ராம்பிரகாஷ், சுஜித் சண்டை பயிற்ச்சி வீரர் தினேஷ் - இவர்களின் கடினமான உழைப்பில் மிகவும் பிரமாதமாக திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ்ச்சியோடு நானும் விக்ராந்த்தும் பணிகளை செய்து வருகிறோம். இந்த படத்தில் fighters கடினமாக உழைக்கின்றனர் அவர்களுக்கு எனது பாராட்டு' என அவரது ட்விட்டரில் பதிவு செய்வதோடு சண்டை காட்சிகளை படமாக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் புதிய தகவலை வெளியிட்ட சுசீந்திரன்