ads

திமிரு புடிச்ச விஜய் ஆண்டனி இப்ப கொலைக்காரன் ஆனார்

காளி பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி அடுத்த பட தலைப்பை வெளியிட்டுள்ளார்.

காளி பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி அடுத்த பட தலைப்பை வெளியிட்டுள்ளார்.

அண்ணாதுரை படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் மே 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இந்த படத்தை 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்து, தயாரித்தும் வருகிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆண்டனி, தனது அடுத்த படத்திற்கு 'கொலைக்காரன்' என்று தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது காளி படத்திற்கு பிறகு இயக்குனர் கணேசா எழுதி இயக்கி வரும் 'திமிரு புடிச்சவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக திமிரு புடிச்சவனாக நடிக்கும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக இணைந்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி 'மூடர் கூடம்' படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் இயக்குனர் மற்றும் நடிகரான எஸ்வி சந்திரசேகர் தற்போது நடித்து வரும் 'டிராபிக் ராமசாமி' படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இப்படி பல படங்களில் பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனி, திமிரு புடிச்சவன் படத்திற்கு பிறகு 'கொலைக்காரன்' என்ற புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'இரும்புத்திரை' படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இவருடைய நடிப்பிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

திமிரு புடிச்ச விஜய் ஆண்டனி இப்ப கொலைக்காரன் ஆனார்