ads

இரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை ஊடகங்கள் இதனை பரப்ப வேண்டாம்

இரும்புத்திரை படம் மே 11இல் வெளியாவதாக தவறான செய்தியை பரப்பி வருவதாக விஷால் தெரிவித்துள்ளார்.

இரும்புத்திரை படம் மே 11இல் வெளியாவதாக தவறான செய்தியை பரப்பி வருவதாக விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தை புதுமுக இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் இசை போன்றவை வெளியானதை அடுத்து இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்த படம் வரும் மே மாதம் 11-ஆம் தேதியில் வெளியாக உள்ளதாக புது போஸ்டர்களும் வெளியாகியுள்ளன. இதனை நம்பி ஊடகங்கள் இந்த படம் மே 11இல் வெளியாக உள்ளதாக தகவல் பரப்பி வருகிறது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் தனது டிவிட்டரில் "ஊடகங்கள் இரும்புத்திரை படம் மே 11இல் வெளியாவதாக தவறாக பரப்பி வருகின்றன. இது ரிலீஸ் தேதி இல்லை. சில விநியோகஸ்தர்களின் கருத்து வேறுபாடு காரணமாகவும் சில கருத்து மோதல்களாலும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் இந்த படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதலுக்கு பிறகு இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். அதுவரை எங்களுடைய அதிகாரபூர்வ அறிவிப்பின்றி ஊடகங்கள் இந்த தவறான ரிலீஸ் தேதியை பரப்ப வேண்டாம்" என கேட்டு கொண்டுள்ளார். 

இரும்புத்திரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை ஊடகங்கள் இதனை பரப்ப வேண்டாம்