ads

ஜோய் ஆலூக்காசில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

it raid on joy alukkas jewellery shop

it raid on joy alukkas jewellery shop

பிரபல நகைக்கடையான ஜோய் ஆலுக்காஸ் நகை கடையின் பத்து கிளைகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையின் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தியாகராய நகர் சாலையில் உள்ளது ஜோயாலுக்காஸ் நகைக்கடை. இந்த  நகைக்கடையானது கேரளாவை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நகைக்கடைக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் 10க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

இந்த நகைக்கடைகள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சசிகலா, தினகரன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சுமார் 187 இடங்களில் ஓரே நாளில் சோதனை நடத்தி தமிழ்நாட்டை பரபரப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் தற்போது பிரபல நகைக்கடையான ஜோய் ஆலுக்காஸ் நகைகடையில் சோதனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நகைக்கடை மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகள் மற்றும் கடைகளில் பணியாற்றும் முக்கிய பணியாளர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடையில் தொடர்ந்து வருமான வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரின் பேரில்  இந்த சோதனை நடத்தப்படுவதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது கோவை காந்திபுரத்தில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகை கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஜோய் ஆலூக்காசில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை