ads

ஒக்கி புயலால் அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்

madurai high court

madurai high court

ஒக்கி புயல் காரணத்தினால் பல மீனவர்கள் கடலுக்குள் காணாமல் போய்விட்டனர். இதன் காரணத்தினால் மீனவ குடும்பத்தினர் வருத்தத்தில் இருக்கின்றனர். இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகள் அரசாங்க தரப்பில் இருந்து எடுக்கப்பட்டும்  இந்த மீட்பு பணி முழுமையாக நிறைவடையவில்லை. இன்னும் 551 மீனவர்களில் பற்றிய தகவல் தெரியாமல் இருக்கிறது.இவர்களை மீட்க கோரி மீனவ குடும்பத்தினர் கண்களை கருப்பு துணியால் கட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களின் பாதிப்பிற்கு திரைத்துறையை சார்ந்த நடிகர் ஜிவி.பிரகாஷ், நடிகர் ஆதி, சரத்குமார், விஷால் என பலரும் ஆதரவுகளையும், ஆறுதல்களையும் அளித்து வருகின்றனர்.     

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வருகிற 22ம் தேதிக்குள் ஒக்கி புயலால் காணாமல் போன 551 மீனவர்களை மீட்பது குறித்து மத்திய மாநில அரசு பதிலளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வருகிற 22ம் தேதி அன்று காணாமல் போன மீனவர்களை மீட்பது குறித்து புதிய செயல் முறைகள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.          

ஒக்கி புயலால் அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்